search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரணி ஆறு"

    • கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.
    • இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியும், ஆற்று வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    எனினும் திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், பழவேற்காடு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான ஒருசில இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 3 இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் கிராமத்தில் ஆரணி ஆற்று வெள்ளம் காரணமாக தரைப் பாலம், சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவர்கள் பழவேற்காடு பகுதிக்கு படகுகளில் சென்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாக அவர்களது படகு பயணம் நீடித்து வருகிறது. ஆரணி ஆற்றில் வெள்ளம் இன்னும் குறையவில்லை. தண்ணீர் குறைந்த பின்னரே சாலைகள் சீரமைக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்று தெரிகிறது. ஒரு வாரமாக தங்களை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை, நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்

    இதேபோல் கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.

    மீஞ்சூர் அடுத்த கேசவ புரம், பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. அதனை ராட்சத மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறார்கள். மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம், பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தும் மழைநீர் வடியாமல் இன்னும் தேங்கி நிற்கிறது.

    பழவேற்காடு அடுத்த தாங்கள் பெரும் புலம் ஊராட் சிக்கு உட்பட்ட தாங்கல், பெரும் புலம், இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றனர். போக்குவரத்து தடைப்பட்டதால் டிராக்டரில் உணவு மற்றும் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் தலைமையில் வழங்கப்பட்டு வருகின்றன. பழவேற்காடு அண்ணா மலைச்சேரி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. மீன்வளத்துறை சார்பில் கணக்கெ டுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    • பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
    • பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டதில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதிகாரிகள் வெள்ள பாதிப்பை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அவர் மீஞ்சூர் ஒன்றியம், லட்சுமிபுரம் அணைக் கட்டு, ஏ.ரெட்டி பாளையம், சோமஞ் சேரி, ஆண்டார் மடம், தத்தை மஞ்சி, ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு ஆரணி ஆற்றில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ளம் புகுந்த பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதா? எனவும் முன்னெச்சரிக்கையாக அங்கு அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள், கயிறு, கம்புகளை பார்வையிட்டார், பின்னர் திருப்பாலைவனம் பேரிடர் மைய கால கட்டிடத்தை பார்வையிட்டு ஜன்னல், கதவுகள், கழிவறைகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பு பகுதிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு உள்ளது. பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    ஆய்வின் போது, சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், ஆரணிஆறு செயற்பொறி யாளர் ராதா கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திர சேகர், குமார், ராம கிருஷ்ணன் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி, தலைவர் கவிதா மனோகரன் உடன் இருந்தனர்.

    • மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் வீடுகளை மூழ்கடித்தது.
    • 2 ஆறுகளை இணைக்கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளததில் மிதக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஒரே நாளில் பெய்த அதிக கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் வெள்ளம் திறந்துவிடப்பட்டது.

    மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து சென்னையில் பல இடங்களில் வீடுகளை மூழ்கடித்தது. அதன் பிறகு கடந்த 2011-ம் ஆண்டு பெய்த கனமழையாலும் சென்னை வெள்ளக் காடானது.

    வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ஆறுகளின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    ஆனாலும் தனித் தனியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க முடியாது. எனவே சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக சென்னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்க திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறுகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த 2 ஆறுகளையும் இணைக்கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளை இணைப்பதற்கான தொழில் நுட்ப சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    வடசென்னை பகுதியில் கடல்நீர் முகத்துவாரத்தின் வழியே ஆறுகளில் புகுவதை தடுக்க இந்த நதிகள் இணைப்பு தேவைப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை, தாமரை பாக்கம் சாலை அருகே கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை உள்ளது. இங்கிருந்து உபரி நீரை வெளியேற்ற இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

    காரனோடை புதுவயல் சாலை அல்லது வெங்கல், பஞ்செட்டி அருகே உள்ள ஆறுகளை இணைக்கும் வகையில் கால்வாய் அமைக்க பரிந்துைரக்கப்பட்டு உள்ளது. இது நிலத்தடிநீரை அதிகரிக்கும்.

    பஞ்செட்டி வரை கடல்நீர் கிட்டத்தட்ட 15 கி.மீ வரை உள்ளே புகுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வறண்ட நிலையில் காணப்படுகிறது.

    ஆறுகளை இணைப்பதன் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் கடல்நீர் உட்புகுவதை குறைக்க முடியும்.

    ஆறுகள் இணையும் இடங்களில் இணைப்பு காய்வாயுடன் அணைகள் கட்டப்பட்டு வெள்ளப் பெருக்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மங்களம்-ஆரணி இடையே உள்ள தரைப்பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
    • தொடர்மழை காரணமாக பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது.

    பெரியபாளையம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்னீத் மலைப்பகுதியில் ஆரணி ஆறு தொடங்குகிறது. இந்த ஆறு பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை கடந்து பழவேற்காடு முகத்து வாரம் வழியாக கடலில் கலக்கின்றது.

    இந்தநிலையில் பலத்த மழை காரணமாக பெய்த மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி உள்ளது. அணையில் இருந்து 460 கன அடி மழைநீர் வெளியேறி ஏ.ரெட்டிபாளையம் தடுப்பணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியபாளையம் அருகே உள்ள புதுப்பாளையம்-அஞ்சாத்தம்மன் கோவில் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கி உள்ளது. இதேபோல் மங்களம்-ஆரணி இடையே உள்ள தரைப்பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்மழை காரணமாக பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பியது. இதனால் இந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கடந்த ஆண்டு பருவமழையின்போது ஆரணி ஆற்றில் பெரும்பேடு, தத்தை மஞ்சி, ஆண்டாார் மடம், ஏரெட்டிப்பாளையம், கடப்பாக்கம், பிரளயம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரை உடைந்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து தற்போது கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றி வேலன் தலைமையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அப்பகுதியில் மணல் மூட்டைகள் சவுக்கு கம்புகள், கயிறு, அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர்மழையால் கடப்பாக்கம் ஊராட்சி ஆண்டார் மடம் பழவேற்காடு சாலையில் போடப்பட்ட தற்காலிகமாக சாலை சேதம் அடைந்தது. இதனை தாசில்தார் செல்வகுமார் பார்வையிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    பழவேற்காடு முகத்துவாரம் வழியாக செல்லும் வெள்ள நீரில் கடல் நீர் புகுந்ததால் ஆரணி ஆற்றின் தண்ணீர் ஆண்டார் மடம் வரை உப்பாக மாறி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் உப்பாக மாறி விடுவதாகவும், விவசாய நிலங்களுக்கு சென்றால் பயிர்கள் கருகிவிடும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×